பல்லவி
பரிபாலய தா3ஸ1ரதே2 ராம மாம்
பரிபாலய தா3ஸ1ரதே2
சரணம்
சரணம் 1
1கபட நாடக ஸூத்ர தா4ர
கனக படாவ்ரு2த லோகாதா4ர மாம் (ப)<
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பரிபாலய/ தா3ஸ1ரதே2/ ராம/ மாம்/
காப்பாய்/ தசரதன் மைந்தா/ இராமா/ என்னை/
பரிபாலய/ தா3ஸ1ரதே2/
காப்பாய்/ தசரதன் மைந்தா/
சரணம்
சரணம் 1
கபட/ நாடக/ ஸூத்ர தா4ர/
வஞ்ச/ நாடக/ பாவைக்கூத்தா/
கனக/ பட/-ஆவ்ரு2த/ லோக/-ஆதா4ர/ மாம்/ (ப)
பொன்/ ஆடை/ அணிவோனே/ உலகத்திற்கு (மக்களுக்கு)/ ஆதாரமே/ என்னை/...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
ஒவ்வொரு சரணத்திலும் கடைசி சொல்லாகிய 'மாம்', சில புத்தகங்களில், சில சரணங்களில் கொடுக்கப்படவில்லை. ஒரே சீராக இருப்பதற்காக, அனைத்து சரணங்களிலும், இச்சொல், இங்கு ஏற்கப்பட்டுள்ளது.
Top
மேற்கோள்கள்
1 - கபட நாடக ஸூத்ர தா4ர - வஞ்ச நாடகப் பாவைக்கூத்தன் - உலகமொரு நாடக மேடையாகவும், நாமெல்லாம் பாவைகளாகவும், இறைவன் பாவைக் கூத்தனாகவும்
ஆக்கல், அளித்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழல்களையும், இறைவன் ஏதும் நோக்கமின்றி நடத்துகின்றான். ஆயினும், இறைவனுடைய அவதாரங்களில், அவனுடைய சில செயல்கள், மேலெழுந்தவாரியாக நோக்குகையில், வஞ்சமானவை என்று கூறத்தோன்றும். உதாரணமாக, மோகினியாக அவதரித்து அசுரர்களுக்கு அமிழ்து கிடைக்காமற் செய்தது (பாகவத புராணம், 8-வது புத்தகம், 12-வது அத்தியாயம்), வாமனராக அவதரித்து பலி சக்கரவர்த்தியின் தலைமீது மூன்றாவது அடி ஊன்றியது, முசுகுந்தனுக்கு மறைந்திருந்து அருளியது (பாகவத புராணம், 10-வது புத்தகம், அத்தியாயம் 50) ஆகியவை. அதனால்தான், இறைவனை 'வஞ்ச நாடகப் பாவைக்கூத்தன்' என்கிறார் தியாகராஜர்.
வாமனாவதாரம் பற்றிய வைணவப் பெருந்தகை தேசிகனின் 'தெஹலீஸ ஸ்துதி' நோக்கவும்.
முசுகுந்தன் ராமனுடைய மூதாதையரில் ஒருவனாகும். முசுகுந்தன் கதைச் சுருக்கம் நோக்கவும்.
முசுகுந்தன் சிவத்தொண்டனென்றும் கூறப்படும். விடங்கத் தலங்களைப் பற்றிய விவரம் நோக்கவும். - திருவாரூர் ஓர் விடங்கத்தலமாகும்.
பாகவத புராணம்
Top
விளக்கம்
வைதேகி - சீதை
Top